Friday, May 10, 2019

சிறுசேமிப்பு -பயங்கள்,எளிய சேமிப்புக்கான வழிகள்

                            சிறுசேமிப்பு 


முன்னுரை :
                    "பொருள் இல்லாருக்கு இவ்வுலகமில்லை" என்றார் வள்ளுவர். "பணம் பத்தும் செய்யும்" என்பது பழமொழி.வாழ்க்கை என்னும் வண்டி இனிதே செல்ல பொருள் என்னும் சக்கரம் தேவையாகும்.அவ்வாறு நல்வழியில் தேடிய பொருளின் ஒரு பகுதியைச் சேர்த்து வைப்பதே நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பொருளுரை:
                        மழைக்காலத்திற்குத் தேவையான உணவை எறும்புகள் முன்னரே சேமித்து வைத்துக் கொள்கின்றன. அது போல மனிதன் தனது எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். மனிதனுக்கு அவசரத் தேவை என்று எப்போது வேண்டுமானால் வரலாம். அப்படி ஒரு அவசர நிலை வரும் பொழுது செய்வதறியாது திகைக்காமல் முன்பே சேமித்து வைத்திருந்தால் அது கை கொடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. சேமிப்பதால் நமது எதிர்காலம் வளம் பெறும்.

எளிய சேமிப்புக்கான சிறு வழிகள்:

சேமிப்பு

நேர்மறை(ப்ளஸ் )

எதிர்மறை (மைனஸ்)             
சஞ்சாயிகா
பள்ளி மாணவர்களுக்கான   சிறுவர் வங்கி

சிறுவாட்டுச் சேமிப்பு (அம்மாக்கள் ரகசியமாக சேமிக்கும் சேமிப்பு )
நினைத்த நேரத்தில்இந்தச் சேமிப்புப்    பணத்தைப்      பயன்படுத்தலாம்சேமிப்புப் பணத்துக்கு நிச்சய                 உத்தரவாதம் உண்டு.
 பண வீக்கத்தைத்தாண்டிய  லாபம் கிடைக்காது.
தபால் நிலைய சேமிப்பு/வங்கிகள் 
பாதுகாப்பு
 வட்டிவிகிதம் குறைவு 
மியூச்சுவல் ஃபண்டு
வட்டிவிகிதம் அதிகம்
 அபாயம் உண்டு. நீங்கள் தேர்தெடுக்கும் நிறுவன-த்தின் ஏற்ற இறக்கத்தை              முன்னிட்டு மாறுபடும்.

சேமிப்பின் பயங்கள் :
  • உயர் படிப்பிற்க்காக 
  • எதிர்பாராத குடும்ப செலவிற்காக 
  • வாழ்க்கை முன்னேற்றத்திற்காக 
  • முதுமை காலத்தில் இன்பத்துடன் கழிக்க
போன்ற நம் தேவைகளுக்கு சேமிப்பு உதவுகின்றது.நாம் உழைத்து வாழ வேண்டும் . பிறர் உழைப்பில் வாழ்தல் ஆகாது . சிக்கனத்துடனும் சேமிப்புடனும் வாழ வேண்டும் . நமது எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும் .

முடிவுரை:
              "சிறுதுளி பெருவெள்ளம் " என்பது பழமொழி.ஆதலால் நாம் சேமிக்கும் பழக்கத்தை இளமை பருவத்திலேயே மேற்கொண்டு சேமித்து வளமுடையவராக வாழ்வோமாக !!!

Monday, September 10, 2018

எனக்குப் பிடித்த பண்டிகை

எனக்குப்  பிடித்த பண்டிகை

முன்னுரை:
    தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் தமிழர் பண்டிகையான  பொங்கல் பண்டிகை தான் எனக்குப் பிடித்த பண்டிகை ஆகும்.தமிழரர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா "பொங்கல்" ஆகும்.

பொருளுரை:
    தை மாதம் என்பது ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடைவதே  ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த புது அரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் செய்து  சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.மஞ்சள் தோரணங்கள் கட்டி, கரும்பு உண்டு பொங்கலைக் கொண்டாடுவார்கள்.
பொங்கல் கொண்டாடும் விதம்:
இந்தப் பண்டிகை நான்கு  நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. 

போகி :
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" போகிப் பண்டிகை ஆகும். மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் நமது பழைய ஆடைகளை குப்பையில் எறிந்துவிடும் விழா. 
சூரியப் பொங்கல்: சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும். 
மாட்டுப் பொங்கல்: விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள்
காணும் பொங்கல்:  இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் வேண்டிக்கொள்வது இந்நாளில் தான். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

முடிவுரை :
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற கருத்துக்கு இணையாக  தமிழர் பண்டிகையனப் பொங்கலைக் கொண்டாடி இயற்கைக்கும் ,மற்ற உயிர்களுக்கும் நாம் நம் நன்றியை செலுத்துவோம் .  

விளையாட்டின் பயன்கள்

விளையாட்டின்  பயன்கள் 

முன்னுரை:
          மனித சமுதாயம் எவ்வளவு பழைமையானதோ, அவ்வளவு பழைமையானது விளையாட்டுகள். மனிதனின் முதல் பொழுதுபோக்காக விளையாட்டுகள் தோன்றின. 
விளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும்,மகிழ்ச்சிக்காகவும் சில வேளைகளில் கற்பித்தல் நோக்குடன் விளையாடப்படும் ஒரு செயல்பாடு ஆகும்.
பொருளுரை:
விளையாட்டின்  முக்கியத்துவம்:
  • மனிதன் தனது உடல் திறன்களைத் திடமாக்கி கொள்ள ,
  • தன்னை பரிசோதித்து கொள்ளவும்  விளையாட்டு மிகவும் அவசியம்
விளையாடுவதால் மனிதன்  
உடல்நலத்தையும் ,மனநலத்தையும், சமூகநலத்தையும் பெறலாம்.விளையாடுவதால் ஒவ்வொருவரின் தனித்திறமை  வளர்கிறது.

விளையாட்டின் பிரிவுகள் :






விளையாட்டின் 
பிரிவுகள்


வகை 1

வெளியக விளையாட்டு
  வெளியே விளையாடும் விளையாட்டு 
·       கூடைப்பந்தாட்டம் 
·       கால்பந்து 
·       வலைப்பந்து 

உள்ளக விளையாட்டு
வீட்டின் உள்ளே விளையாடும் 
விளையாட்டு 
·       சதுரங்கம்
·       கேரம்
·       பரமபதம்
·       இறகுப்பந்தாட்டம்

வகை 2

குழு விளையாட்டு
குழுவாக விளையாடுதல் 
·       மட்டைப்பந்து
·       கைப்பந்தாட்டம் 
·       வலைப்பந்து 
தனி விளையாட்டு
தனியாக விளையாடுதல்
·       ஓட்டம் 
·       மேசைப்பந்தாட்டம் 
·       தடியூன்றித் தாண்டுதல்
·       நீளப்பாய்ச்சல் 



பண்டைய மக்கள் விளையாட்டு:

  • அச்சுப்பூட்டு 
  • பம்பரம் 
  • பட்டம் 
  • பல்லாங்குழி 
  • பச்சைக்குதிரை 
முடிவுரை:
"ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா " என்பது பாரதியாரின் கூற்று.அவ்வாக்கின்படி அனைவரும் விளையாட்டில் ஈடுபட்டு நம் உடல் வலிமை மற்றும் நாட்டின் வளத்தையும் மேன்படுத்துவோம் .